எனக்குப் பிடித்த வரலாற்றுச் சின்னம் 👇
திண்டுக்கல் என்றாலே மலைக்கோட்டை....மலைக்கோட்டை என்றாலே ஒரு பிரபலமான சுற்றுலா தளம் என்பது தான் எல்லோருக்கும் நினைவில் வரும். ஆனால் மலைக்கோட்டையில் உள்ள ஒவ்வொரு இடமும் எதற்காக உருவாக்கப்பட்டது என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை... தெரிஞ்சுக்கலாம் வாங்க 🤩..!
சுமார் 290 அடி உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டை சுமார் 1210 அடி நீளமும், 900 அடி அகலமும் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 372 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது...
1605 ஆம் ஆண்டு மதுரை நாயக்கர் மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் கோட்டை மைசூர் (மைசூர் உடையார்ஸ்) இராச்சியத்திற்கு சென்றது. பின்னர் இது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டது...
சோழ மன்னன் கரிகால் சோழன் கி.பி முதல் நூற்றாண்டில் பாண்டிய சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றினான், அப்போது திண்டுக்கல் சோழர் ஆட்சியின் கீழ் வந்தது. பல்லவர்கள் தென்னிந்தியாவின் பெரும்பாலான மாகாணங்களைக் கைப்பற்றினர் (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு) அவர்கள் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை திண்டுக்கல்லின் ஆட்சியாளர்களாக இருந்தனர். பல்லவர்களுக்குப் பிறகு சோழர்கள் மீண்டும் அப்பகுதியை மீண்டும் கைப்பற்றினர். 13 ஆம் நூற்றாண்டு வரை, சோழர்கள் அங்கு ஆட்சி செய்தனர், அதன் பிறகு பாண்டியர்கள் கைப்பற்றினர். தில்லி சுல்தானகத்தைச் சேர்ந்த முஸ்லீம் படையெடுப்பாளர்களின் தலைவரான மாலிக் கஃபூர் 14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவைத் தாக்கினார். அந்த நேரத்தில், திண்டுக்கல் விஜயநகரப் பேரரசின் மன்னர்களால் ஆளப்பட்டது, சேரர்கள் தென்னிந்தியாவின் மற்ற முக்கிய ஆட்சியாளர்களாக இருந்தனர். அவர்கள் முஸ்லீம் படையெடுப்பாளர்களுடன் போரிட்டனர் மற்றும் முஸ்லீம் படையெடுப்பாளர்களுக்கு எதிரான போரில் விஜய நகர் இராணுவத்தின் உச்ச தளபதி கம்பண்ண உடையார் முக்கிய பங்கு வகித்தார். தென்னிந்தியாவில் மற்றொரு குலத்தவர், நாயக்கர்கள் மெதுவாக ஆட்சியைப் பெற்றனர் மற்றும் அவர்களின் பிரதேசம் திண்டுக்கல்லின் எல்லைகளைக் கொண்டிருந்தது. நாயக்கர் வம்சத்தின் மன்னர் விஸ்வநாத நாயக்கர் கி.பி 1563 இல் இறந்தார், அவருக்குப் பிறகு முத்துகிருஷ்ண நாயக்கர் கி.பி 1602 இல் கோட்டையைக் கட்டத் தொடங்கினார். கோட்டையின் கட்டுமானம் கி.பி 1605 இல் நிறைவடைந்தது. முத்துகிருஷ்ண நாயக்கரும் மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய கோட்டையைக் கட்டினார். திண்டுக்கல்லுக்குப் பழைய புகழைக் கொண்டு வந்தவர் மற்றொரு முக்கியமான நாயக்க மன்னர் திருமலை நாயக்கர். திருமலை நாயக்கரின் மரணத்திற்குப் பிறகு பல தகுதியற்ற வாரிசுகள் சில காலம் இப்பகுதியை ஆண்டனர், பின்னர் ராணி மங்கம்மாள் இப்பகுதியின் ஆட்சியாளரானார். அவர் ஒரு திறமையான ஆட்சியாளராக இருந்தார் மற்றும் இன்னும் தென்னிந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நபராக கருதப்படுகிறார்...
ஆற்காடு நவாபின் லெப்டினன்ட்
சந்திரசாஹிப், நாயக்கர்களின் கடைசி மன்னரான வங்காரு நாயக்கரிடமிருந்து திண்டுக்கல்லின் அதிகாரத்தை 1736 இல் பிரிட்டிஷ் படைகளின் உதவியுடன் கைப்பற்றினார், மேலும் 1742 இல் வெங்கடராயர் தலைமையில் மைசூர் இராணுவம் திண்டுக்கல்லைக் கைப்பற்றியது. மைசூர் மகாராஜாவின் சட்டப் பிரதிநிதியாக திண்டுக்கல்லை வேங்கடராயர் ஆண்டார்.மேலும் 1755 ஆம் ஆண்டில் மைசூர் மகாராஜா ஹைதர் அலியை நியமித்தார்.இவரின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று அந்த நேரத்தில் கோட்டையை பலப்படுத்தியது...
திண்டுக்கல் மலைக்கோட்டை புரட்சி காலகட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இறுதியாக 1790 ல் இக்கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி 1860 வரை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்..!
கட்டிடக்கலை👇
மலைக்கோட்டையில் முக்கோணம் போன்ற அமைப்புடைய ஒரு பழங்கால கட்டிடம் இருக்கும். இந்தக் கட்டிடம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் ஆயுதக் கிடங்காக பயன்படுத்தப்பட்டது எனவும் கூறுகின்றனர்.இதனையடுத்து தென்புறம் நோக்கிய இரண்டாவது நுழைவாயிலின் வலது புறத்தில் படை வீரர்கள் தங்கும் அறைகள் இருக்கும். நுழைவாயிலின் கிழக்கு பகுதியில் குதிரை படைகள் மற்றும் வீரர்கள் தங்குவதற்காக 11 கொத்தளங்கள் உள்ளன...
கட்டிடங்களையும் நன்கு உற்றுக் கவனித்தால் ஏதாவது ஒரு கல்வெட்டுகளும் சிறிய அளவிலான சிற்பங்களும் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து திண்டுக்கல் நகர் முழுவதும் தெரிவது கண்ணுக்கு இனிமையான காட்சியாக அமைந்திருக்கும்.
இதனையடுத்து தென்புறம் நோக்கிய இரண்டாவது நுழைவாயிலின் வலது புறத்தில் படை வீரர்கள் தங்கும் அறைகள் இருக்கும். நுழைவாயிலின் கிழக்கு பகுதியில் குதிரை படைகள் மற்றும் வீரர்கள் தங்குவதற்காக 11 கொத்தளங்கள் உள்ளன.
மலைக்கோட்டையின் ஓரங்களில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பாளர் அறை மணிக்கூண்டு போல் அமைந்திருக்கும். இந்த கண்காணிப்பாளர் அறையில் உள்ளே சென்று பார்த்தல் 3 திசைகளை நோக்கிய துளைகள் இருக்கும். இந்தத் துறைகள் வழியாக கோட்டையின் கீழ் உள்ள அனைத்தையும் கண்காணித்து வருவதே கண்காணிப்பாளரின் வேலை என்று கூறுகின்றனர்...
மலைக்கோட்டையில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை எதிரிகள் சுற்றி வளைக்கும் தருணத்தில் இங்கிருந்து தப்பி சென்று திருச்சி மலைக்கோட்டைக்கும் தஞ்சை பெரிய கோலுக்கும், விருப்பாட்சி கோட்டைக்கும், நாமக்கல் கோட்டைக்கும் செல்வதாக பேச்சுகள் உள்ளது...
திண்டுக்கல் கோட்டையின் அறைகள் எந்தவித வெளிப்புற அச்சுறுத்தலுக்கும் எதிராக முழு பாதுகாப்பை வழங்குவதற்காக இரட்டை சுவர்களால் ஆனவை மற்றும் கூரையில் பல சுற்று காற்றோட்ட ஓட்டைகள் இருப்பதால் நன்கு காற்றோட்டமாக இருந்தது. அவசரநிலை ஏற்பட்டால் ராணுவ வீரர்கள் தப்பிச் செல்வதற்காக குடோனின் ஒரு மூலையில் மெல்லிய செங்கல் சுவர் உள்ளது. சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளில் மழைநீர் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் சாய்வான கூரையுடன் குடோனும் கட்டப்பட்டது.திண்டுக்கல்லில் மொத்தம் 48 அறைகள் இருந்தன, அவை போர்க் கைதிகள் மற்றும் அடிமைகளை தங்க வைக்கும் அறைகளாகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு விசாலமான சமையலறை, இராணுவத் தளபதிகளுக்கான சந்திப்பு மண்டபம் மற்றும் குதிரை லாயம் ஆகியவையும் இருந்தன. திண்டுக்கல் கோட்டைக்கு சொந்தமாக மழைநீர் சேகரிப்பு நீர்த்தேக்கங்களும் உள்ளன. கோட்டையின் செங்குத்தான சாய்வைப் பயன்படுத்திக் கொள்ள இவை சிறப்பாகக் கட்டப்பட்டன.
திண்டுக்கல் கோட்டையின் கட்டிடக்கலை அக்கால இந்திய மன்னர்களின் தொழில்நுட்பம் மற்றும் புத்தி கூர்மை மற்றும் இராணுவ கட்டிடக்கலையில் அவர்களின் நிபுணத்துவம் ஆகியவற்றிற்கு சான்றாக உள்ளது...
மலைக்கோட்டை அமைவிடம்👇
திண்டுக்கல் மலைக்கோட்டை திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சி அலுவலகம் மெயின்ரோடு, காந்தி காய்கிறி மார்கெட் வழியாக நடந்து சென்றால் பிரமாண்ட மலைக்கோட்டை வரும்.
இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இந்த மலைக்கோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலைக்கோட்டைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கல்வி சுற்றுலாவிற்காக வரலாற்று மாணவர்கள், பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர்..!😎👍
நன்றி🙏🏻❤️
%20(15).jpeg)
%20(16).jpeg)



%20(11).jpeg)
%20(12).jpeg)




%20(13).jpeg)
%20(15).jpeg)

Comments
Post a Comment